இயக்குனர் சங்கர் அவர்கள் என்னை முதன் முறையாய் தொடர்பு கொண்டு
குறிப்பு: பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றால் எல்லா பாடலும் அவர் புகழ் பறை சாற்றும். உதாரணம் எல்லா படங்களும். அது போல ஐஷ்வர்யாவின் படத்தில் அவர் புகழ் பாடும். உதாரணம் ஜீன்ஸ்.
எந்திரன் படத்தில் மட்டும் தான் நாயக இருவரையும் ஒரு பாடலில் வர்ணிக்க வாய்ப்பு. கவிஞர்கள் தாளில் குலை குலையாய் கவிதை காய்ப்பு!!!
இதோ என் பங்கு....
=======================
கோரஸ்:
இவன் உடலைச் செய்ய தேடி எடுத்தோம் புத்தம் புது உலோகம்!
இவன் உருவம் பார்த்ததும் பரவசத் தீயில் பற்றிக் கொள்ளும் இந்த பரந்த உலகம்!
இந்த அகிலம் முழுதும் ஆனந்தம் நிரப்பிய சமயம்
இவன் அமைதியாய் போய் அமருவானே இமயம்!
பெண்:
எந்திரா! என் தீரா!
என் இந்திரா! என் சந்திரா!
அண்டம் முழுக்க விண்மீன் கூட்டம்!
அதில் நீ ஒருவன் தான் சூரியன்!
இந்த கண்டம் முழுக்க கனவுக் கூட்டம்!
அதில் நீ ஒருவன் தான் காரியன்!
குருதி பாயும் இதயம் பார்த்து கறுகாத என் இதயம்
இறுதியில் எந்திர இதயத்திற்கு ஏங்கியதே!
இருபது வருடங்களாய் இறுகிய என் இதயம்
கடைசியில் மந்திர இதயத்திற்கு மயங்கியதே!
ஆண்:
சிலையே! சேர சோழ கலையே!
என்னை கொதிக்க வைத்த உலையே!
உலக அழகியே! இந்த உலோகம் அதிர வைத்த இசைத் தீயே!
ஆண் என்று தெரிந்ததும் ஒரு அணு விடாமல் தின்ற அசைவப் பூவே!
மரணமற்ற உடல் நான்! உனக்காக ஒரு முறை உருகி
மனிதனாக பிறப்பேன் நான்!
எந்திரனாய் இருக்கும் போதே இப்படி என் இதயத்தில் இசை வெள்ளம்!
மந்திரமாய் மானிடனாய் பிறந்திருந்தால் என்னவாகும் என் உள்ளம்?
கோரஸ்:
இவன் கை அசைத்தால் மேகம் மழை உடன் பொழியும்!
இவன் கை கொடுத்தால் காவிரி கங்கையுடன் இணையும்!
இந்தப் பெயருக்கு பின்னால் இருக்குது மக்கள் சக்தி!
இந்தப் பெயரால் பின் நாள் வரும் ஒரு மக்கள் எழுச்சி!
பெண்:
உன் முகம் பார்த்து மடிந்தேனா? உன் அகம் பார்த்து ஒடிந்தேனா?
பதில் தெரியா கேள்விக்கு விடை தெரியாமல் மடிவேனா?
ஆண்:
அடி கொம்புத் தேனே! என் அன்பு மானே!
கணக்கு பார்த்து வருவதா காதல்?
என்னைத் தாண்டி வந்து விடுமா அந்த சாதல்?
கோரஸ்:
இவள் பிறந்ததும் பூமிக்கே வந்து விட்டது அழகு!
நிலவே இனி நீ அழகில்லை. வெட்கப்பட்டு விலகு!
இவள் படம் பதித்தால் தாளும் தங்கம்!
இவள் உடன் வசித்தால் நாளும் சொர்க்கம்!
பெண்:
உன்னோடு நான் எப்போதும் ஒட்டியே இருப்பது சாதகமா?
பெரிய பெயருடன் இருப்பதால் இதற்கு பாதகமா?
ஆண்:
மனதோடு மாட்டி இருப்பது எப்படி அந்நியம்?
தமிழுக்காய் பிறந்தது நான் செய்த புண்ணியம்!
உலகப் பட்டம் மாறும் உன் அழகு என்றும் கூடும்!
முதுமை கூட முட்டிகொண்டி விலகி விலகி ஓடும்!
கோரஸ்:
இவன் உடலைச் செய்ய தேடி எடுத்தோம் புத்தம் புது உலோகம்!
இவன் உருவம் பார்த்ததும் பரவசத் தீயில் பற்றிக் கொள்ளும் இந்த பரந்த உலகம்!
இந்த அகிலம் முழுதும் ஆனந்தம் நிரப்பிய சமயம்
இவன் அமைதியாய் போய் அமருவானே இமயம்!


No comments:
Post a Comment