Tuesday, December 14, 2010

லென்ஸின் ரத்த சரித்திரம்




கரு: பழிக்குப் பழி.

தத்துவம்: ஹிட்லரிசம்.

ஒரு வரி கதை: விரலுக்கு கை. கண்ணுக்குக் தலை. உயிருக்கு குடும்பம். குடும்பத்துக்கு கிராமம் - பலி!

களம்: துப்பாக்கி,அரிவாள்களும் அவை தாங்கிய மனிதர்களும்.

கால நேரம்: வாழும் வாழ்வைப் போலவே இருட்டும், மங்களும்

கதை: அப்பா, அண்ணனைக் கொல்லும் அடுத்த வகுப்பினரை கொன்று குவிக்கிறான் ரவி. அப்படி இவனால் குடும்பத்தை இழக்கும் சூரி இவனைப் பழி வாங்கத் துடிக்கும் கதை. முன்னவன் தெலுகு தேசம். பின்னவன் காங்கிரஸ். முன்னவன் விவேக் ஓபராய். பின்னவன் சூர்யா.

கற்பனை: நடந்த உண்மை கதை!

பாத்திரங்கள்: அடங்கி வெடிக்கும் சிங்கமாக விவேக். பாயும் புலியாக சூர்யா. இவர்கள் தவிர அன்னபாடிகள் ஆயிரம் பேர்.

சிறப்பு: பெண்களும் பெரிய முடிவுகளில் (கொலைகளைச் செய்ய / வேண்டாமென) தலையிட்டு மாற்றுவது.

யதார்த்தம்: மகா பாரதம் ரத்த சரித்திரமாய்!

புதிர்: அமைச்சராக இருக்கும் ரவி தனக்கென ஒரு படையை வைத்துக் கொண்டு ஹிட்லர் போல எவன் எவன் எதிரியாக 'தெரிகிறானோ' அவனுக்கெல்லாம் ஒரு தோட்டா.சூரியை மட்டும் படம் ஆரம்பித்த 15 நிமிடத்தில் இருந்து கத்தியை வைத்து கொல்ல முயன்று கொண்டே இருப்பது.
பல தலைகள் ரவிக்கே தெரியாமல் அவனுக்காக விழுவது
'உண்மையில்' சூரியின் மேலும் குற்றங்கள் இருக்கையில், இவனை படத்தில் நல்லவனாக காட்டியிருப்பது.

புரிந்தது: பதவிக்காக மனிதம் பைத்தியமாவது.

நடந்தது: படம் முடிந்தவுடன் நம் காலுக்கும் கீழேயும் ரத்தம் உண்டா என்று உற்றுப் பார்ப்பது.

லாஸ்ட் லைன்:-
வஞ்சிக்கப் பட்டவர்கள் சமயம் பார்த்து காத்திருப்பது. பிறகு நேரம் வரும் போது ஒன்று கூடுவது. பதவிக்காக கொஞ்சம் நல்லது செய்வது. வந்த பதவியை விடக் கூடாது என்று மாறி மாறி தப்பு செய்வது, பழி தீர்ப்பது போன்ற மனித குலத்தின் ஒட்ட்டு மொத்த குணங்களையும் வெளிப்படுத்தி காந்தியம் என்பது ஏட்டில். கலவரயியம் என்பது எப்போதும் நாட்டில் என்று சொல்லும் படம் !

No comments:

Post a Comment