ஏறக்குறைய 7 வருடங்களுக்கு முன்பு பார்த்த, பிடித்த ஜில்லுன்னு ஒரு காதல் ஆங்கில திரைப் படம் இது. . "மூன்றாம் பிறை" யான கதை தான். ஆனால் இங்கே நாயகன் தன் காதலியின் குணப்படுத்த முடியாத குறையை தினமும் குணப்படுத்தி(?) வாழ்வான்.தினமும் ஆனந்தத்தோடு போராடி எப்படி வெற்றி பெறுகிறான் என்பதைச் சொல்லும் காவியம்
ஆடம் ஒருநாள் சிற்றுண்டி கடைக்குச் செல்கிறான். அங்கே "விழியில் விழி மோதி இதய கதவொன்று திறந்ததே".... என்று விழி வழியே ஒலி எழுப்பும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்.அவள் சிறு பிள்ளையாய் பேன்கேக்கை (நம்ம ஓர் ஆப்பம்) அழகாய் வெட்டி வைத்து வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள். அழகி சிறு பிள்ளையாய் சிறு பிள்ளை தனமான வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்வது அழகு. அதை பார்த்து ரசிப்பது அதை விட அழகு. ஆடம் அப்படியே அமைதி இழக்கிறான். அந்த வீட்டிற்கு ஒரு கதவு வைக்க (ஆப்பத்தாலேயே) முயன்று கொண்டிருக்கிறாள்.அப்போது நாயகன் ஒரு பல் குத்தும் குச்சியை எடுத்துக் கதவைக் குத்தி அவளின் பார்வையில் கலக்கிறான். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு. இருவருக்கும் வேதியியல் வேலை செய்வதை அழகாய் காட்டியியிருப்பது அருமை. என் அப்பாவிற்கு பிறந்த நாள் இன்று.நான் போக வேண்டும். நாளை காலையும் சாப்பிட இங்கே வா. நானும் வருகிறேன் - என்று சொல்கிறாள். இருவருமே தனித்தனியாக நின்று நல்ல பொழுதை நினைத்து சின்னதாய் ஆட்டம் போடுகிறார்கள். அருமை.முதல் நாள் சந்திப்பு ஒரு கவிதையாய் முடிகிறது.
அடுத்த நாள் வழக்கம் போல ஆடம் அதி காலையிலேயே அவளுக்காய் காத்திருக்கிறான். அவள் வருகிறாள்.இவனைப் பார்க்காமல் போய் அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்கிறாள். இவன் அவளின் பக்கத்தில் சென்று அமர்கிறான். "யார் நீ? என்ன வேண்டும்?" என்று கேட்கிறாள். "என்ன கலாய்க்கிறியா?" என்று இவன் அவள் கையைப் பிடிக்க அவள் சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுகிறாள். அந்த கடையின் முதலாளிப் பெண் ஆடம் அருகில் வந்து தனியாக பேச வேண்டும் என்று சொல்லி அவனை அழைத்து நடந்த விபத்தைச் சொல்கிறாள். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ட்ரியுவும், அவள் அப்பாவும் அவரின் பிறந்த நாளன்று அன்னாசிப் பழம் வாங்கப் போகும் வழியில் அவர்களின் வாகனம் விபத்துகுள்ளாகி, அவளுக்கு விபத்து நடந்த நாளுக்கு முன்பு வரை தான் ஞாபகம் இருக்கும் என்பதை சொல்கிறாள்.
அதனால் ஒவ்வொரு காலையும் அன்று தன் தந்தைக்கு பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். அவளின் அப்பாவும், தம்பியும் அவளுக்கு நடந்த விபத்தை பற்றி மறைக்க, தினமும் அக் 14 (பிறந்த நாள்) போல நாள்காடியை சரி செய்து விடுவார்கள். ஒரே தினசரியை தினமும் போடுவார்கள். அன்று நடந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்து தினமும் போட்டு விடுவார்கள். அவளுக்கு அன்று (என்றும்) அக் 14. தினமும் அவர்கள் வீட்டில் அவளின் அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவாள்.
இதைத் தெரிந்ததும் ஆடம் அதைப் பற்றிக் கவலைப் படாமல் தினமும் வந்து அவளை காதலிக்க வைப்பான். சில நாட்கள் தோல்வி. பல நாட்கள் வெற்றி. அதாவது அந்த பல நாட்கள் அவள் அவனை அன்று புதியாய் காதலிப்பாள். அன்றைக்கு இவன் காதலும் புதுப்பிக்கப்படும். ஒரு நாள் காதல் = சின்ன ஹைக்கூ.
ஆடம் அவள் அப்பாவிடம் சென்று எத்தனை நாளைக்குத் தான் அக் 14 என்று ஏமாற்றப் போகிறீர்கள். அவளிடம் உணமையை சொல்லுங்கள் என்பான். அவளின் அப்பா அப்படியே சொன்னாலும் அவள் அழுது கொண்டு அன்று மட்டுமே ஞாபகம் வைத்து இருப்பாள். அடுத்த நாள் மீண்டும் அக் 14 என தான் நினைப்பாள் என்று சொல்வார். இவன் அவள் வாழ்க்கையில் இருக்கிறான் என்பதே அவளுக்கு அன்று (தினமும்) மட்டும் தான் ஞாபகம் இருக்கும். அருமையான பிரச்சனை. எப்படி தீர்ப்பது? இது தான் பின் பாதிக் கதை.
ஆடம் ஒருநாள் சிற்றுண்டி கடைக்குச் செல்கிறான். அங்கே "விழியில் விழி மோதி இதய கதவொன்று திறந்ததே".... என்று விழி வழியே ஒலி எழுப்பும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்.அவள் சிறு பிள்ளையாய் பேன்கேக்கை (நம்ம ஓர் ஆப்பம்) அழகாய் வெட்டி வைத்து வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள். அழகி சிறு பிள்ளையாய் சிறு பிள்ளை தனமான வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்வது அழகு. அதை பார்த்து ரசிப்பது அதை விட அழகு. ஆடம் அப்படியே அமைதி இழக்கிறான். அந்த வீட்டிற்கு ஒரு கதவு வைக்க (ஆப்பத்தாலேயே) முயன்று கொண்டிருக்கிறாள்.அப்போது நாயகன் ஒரு பல் குத்தும் குச்சியை எடுத்துக் கதவைக் குத்தி அவளின் பார்வையில் கலக்கிறான். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு. இருவருக்கும் வேதியியல் வேலை செய்வதை அழகாய் காட்டியியிருப்பது அருமை. என் அப்பாவிற்கு பிறந்த நாள் இன்று.நான் போக வேண்டும். நாளை காலையும் சாப்பிட இங்கே வா. நானும் வருகிறேன் - என்று சொல்கிறாள். இருவருமே தனித்தனியாக நின்று நல்ல பொழுதை நினைத்து சின்னதாய் ஆட்டம் போடுகிறார்கள். அருமை.முதல் நாள் சந்திப்பு ஒரு கவிதையாய் முடிகிறது.
அடுத்த நாள் வழக்கம் போல ஆடம் அதி காலையிலேயே அவளுக்காய் காத்திருக்கிறான். அவள் வருகிறாள்.இவனைப் பார்க்காமல் போய் அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்கிறாள். இவன் அவளின் பக்கத்தில் சென்று அமர்கிறான். "யார் நீ? என்ன வேண்டும்?" என்று கேட்கிறாள். "என்ன கலாய்க்கிறியா?" என்று இவன் அவள் கையைப் பிடிக்க அவள் சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுகிறாள். அந்த கடையின் முதலாளிப் பெண் ஆடம் அருகில் வந்து தனியாக பேச வேண்டும் என்று சொல்லி அவனை அழைத்து நடந்த விபத்தைச் சொல்கிறாள். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ட்ரியுவும், அவள் அப்பாவும் அவரின் பிறந்த நாளன்று அன்னாசிப் பழம் வாங்கப் போகும் வழியில் அவர்களின் வாகனம் விபத்துகுள்ளாகி, அவளுக்கு விபத்து நடந்த நாளுக்கு முன்பு வரை தான் ஞாபகம் இருக்கும் என்பதை சொல்கிறாள்.
அதனால் ஒவ்வொரு காலையும் அன்று தன் தந்தைக்கு பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். அவளின் அப்பாவும், தம்பியும் அவளுக்கு நடந்த விபத்தை பற்றி மறைக்க, தினமும் அக் 14 (பிறந்த நாள்) போல நாள்காடியை சரி செய்து விடுவார்கள். ஒரே தினசரியை தினமும் போடுவார்கள். அன்று நடந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்து தினமும் போட்டு விடுவார்கள். அவளுக்கு அன்று (என்றும்) அக் 14. தினமும் அவர்கள் வீட்டில் அவளின் அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவாள்.
இதைத் தெரிந்ததும் ஆடம் அதைப் பற்றிக் கவலைப் படாமல் தினமும் வந்து அவளை காதலிக்க வைப்பான். சில நாட்கள் தோல்வி. பல நாட்கள் வெற்றி. அதாவது அந்த பல நாட்கள் அவள் அவனை அன்று புதியாய் காதலிப்பாள். அன்றைக்கு இவன் காதலும் புதுப்பிக்கப்படும். ஒரு நாள் காதல் = சின்ன ஹைக்கூ.
ஆடம் அவள் அப்பாவிடம் சென்று எத்தனை நாளைக்குத் தான் அக் 14 என்று ஏமாற்றப் போகிறீர்கள். அவளிடம் உணமையை சொல்லுங்கள் என்பான். அவளின் அப்பா அப்படியே சொன்னாலும் அவள் அழுது கொண்டு அன்று மட்டுமே ஞாபகம் வைத்து இருப்பாள். அடுத்த நாள் மீண்டும் அக் 14 என தான் நினைப்பாள் என்று சொல்வார். இவன் அவள் வாழ்க்கையில் இருக்கிறான் என்பதே அவளுக்கு அன்று (தினமும்) மட்டும் தான் ஞாபகம் இருக்கும். அருமையான பிரச்சனை. எப்படி தீர்ப்பது? இது தான் பின் பாதிக் கதை.
ஈ.டீ-யில் நடித்த அதே பிஞ்சு கன்றுக் குட்டி, பாலாகி தயிராகி மோராகி ட்ரியு பெரிமோரா வந்தாலும் அதே பால் மணம் மாறா முகம். எனக்குப் பிடித்த ஹாலிவுட்டின் ஜோதிகா ட்ரியு பெரிமோரின் குழந்தை-குமரி முகமும், அவளின் பாவனைகளும், அவளின் பிரகாசங்களும், சிலிர்ப்புகளும் ஆடமின் தினமும் அவளை காதலிக்க வைக்க அவன் போடும் ஐடியாக்களும், அவன் நண்பர்களின் சேட்டையும், அவன் அவளை காதலிக்க வைக்கும் போது அருகில் இருக்கும் ஒரு ஜப்பானிய பெரியவர் அடிக்கும் நக்கல்களும், ஹவாய் தீவின் பசும் நிறமும், சுற்றிக் கிடக்கும் கடலும் நாமும் படம் முடிந்து வெளி வரும் போது ஒரு பரவச காதலைப் பார்த்த மகிழ்வை வர வைக்கும்.
லந்து: "Did we have ?"" என்று அவள் அவனிடம் கேட்பது
ரகளை: அடுத்த நாள் காலை அவனை அவளது அறையில் பார்த்து அவன் யார் எனத் தெரியாமல் அலறுவது.
அடாவடி: ஒரு நாள் காதலுக்கு போடும் திட்டங்கள்
கூத்து: ட்ரியுவின் தம்பி
கும்மாளம்: கடல் சீலிடம் போய் அவர்களின் காதலின் அடுத்த கட்டம் பற்றி கேட்பது.
ரேட்டிங்: கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில்.. இல்லை இல்லை ரசிக்க வேண்டிய கவிதைகளில் ஒன்று.



No comments:
Post a Comment