Sunday, December 9, 2012

என்னில் பிரதிபளித்த மணி ரத்னத்தின் 'கடல்' பாடல்!

ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன பாக்குறா. பாத்ததுலேருந்து அவ அவளா இல்லை. அவங்கிட்டே போயி எதுவும் சொல்ல முடியல. இப்ப அவ இருக்குற நெலமக்கு ஏற்ப ஒரு பாட்டு எழுதணும்.

கண்டிப்பாக இது தான் 'கடல்' படத்தின் 'நெஞ்சுகுள்ள" பாடலுக்கான சூழ்நிலை.


மருதமும் நெய்தலும் கலந்து இருக்கின்ற டெல்டா பகுதியைச் சார்ந்த தஞ்சை மாவட்ட படிக்காத பெண்ணொருத்தி, அவன் அப்படி ஒன்றும் அழகில்லை. அவனை விட எவ்வளவோ பேர் இருக்கும் போதும் அவனிடம் ஈர்க்கப்படுகிறாள்.

குறிப்பு:
வைரமுத்து அவர்களின் சாயல் கூட என் கவிதையில் இருக்கக் கூடாது என்பதால் கவனமாக எழுதுயுள்ளேன்.


தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கருவண்டு உன்ன கண்டு குறஞ்சுருச்சே!

உச்சி வெயில் நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!

சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!

அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!

காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!
தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கரு வண்டு உன்ன கண்டு குறஞ்சுருச்சே!

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்.....

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

உச்சி வெயில் நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!

சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்.....
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!

காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கரு வண்டு உன்ன கண்டு குறஞ்சுருச்சே!


தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

ஒளி ஒலி வடிவத்தில்....

No comments:

Post a Comment